கோடையும் வசந்தமும்
மீராவின் படைப்புலகம் ஒரு வர்ணச் சித்திரமல்ல வர்ண விசித்திரம் மரபுக் கவிதையின் விசால வீதிகளில் கடிவாளமில்லாத புரவியாய் பவனி வரவும் அவரால் முடிந்தது. புதுக்கவிதையின் விசுவ வெளியில் ஓசையின்றி நழுவும் விண்கலமாவது அவருக்குச் சாத்தியமானது. வாழும் காலத்தில் நமக்கு ஒரு வரமாகக் கிடைத்த மீரா வெறும் கவிஞர் மட்டுமல்ல - காலத்தின் குரல். அவரை அறிவதும், அவரை உணர்வதும் நம் கால இலக்கியவாதிகளுக்கு வாழ்வின் பெருமிதம்