குழந்தைகளைக் கொண்டாடுவோம் (அன்னம் பதிப்பகம்)
குழந்தைகளுக்காக பாடுதல், கவிதை இயற்றுதல் ஒருவகை. குழந்தையையேப் பாடுபொருளாக்கி எழுதுவது மற்றொரு வகை. முதல் வகையில் ஏராளமான தொகுப்புகள் வந்துள்ளன. இரண்டாம் வகையில் சமீபமாய் முயற்சி நடைபெற்று வருகின்றன. குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும், எங்’னம் கொண்டாட வேண்டும் என பெரியோர்களுக்காக எழுதுவது மூன்றாம் வகை. இவ்வகையில் வந்திருக்கும் தொகுப்பு ‘குழந்தைகளைக் கொண்டாடுவோம்.’ குழந்தைகளைக் கொண்டாடக் கூறியவர் முனைவர் இரா. காமராசு. கலை இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். பரவலாக அறியப்பட்டவர்.