அந்தமான் நாயக்கர்
ஒரு குற்றமும் அறியாத விவசாயி ஒருத்தனை சுதந்திர இந்தியாவின் போலீஸ் அடித்தே கொன்றுபோடும் கதைதான் இது. இருபதுகளில் வடநாட்டில் பர்தோலி கிராமத்தில் வல்லபாய் படேலின் தலைமையில் நிலவரி கொடா இயக்கம் நடந்தது. மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் நடந்த அந்தப் போராட்டத்தின் அலை நாடு பூராவுமே வீசியடித்தது. வெள்ளை அரசை எதிர்த்து நடந்த கொடிப் போராட்டத்தின் போது ஒரு கரிசல் கிராமத்தில் விளையாட்டுப் போல ஒரு இளைஞன் மூவர்ணக் கொடியை மரத்தில் ஏறிக் கட்டிவிடுகிறான். அதன் பிறகு நடந்ததைச் சொல்லுகிறது கதை.